Welcome

Saturday, 30 June 2018

ஜனங்களின் சாய்ஸ் ஜெனரிக் மருந்துகள்!



நம் மக்களின் மருத்துவச் செலவுகளைக் குறைப்பதற்காக வந்தவைதான் `ஜெனரிக்’ மருந்துகள். ஆனால், ‘`ஜெனரிக் மருந்தா... அப்படின்னா என்ன?’’ என்று கேட்கும் நிலையில்தான் நம் மக்களிடம் விழிப்பு உணர்வு இருக்கிறது.
ஒரு மருந்தை, அதில் உள்ள மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ‘ஜெனரிக்’. ஒரு மருந்தோ, மாத்திரையோ கண்டுபிடிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு வந்து, அதன் காப்புரிமைக் காலம் முடிந்த பின்னர் அது எல்லோருக்கும் பொதுவானதாகிவிடும். பிறகு அதை எந்த மருந்து நிறுவனம் வேண்டுமானாலும் தயாரிக்கலாம்; விற்பனை செய்யலாம். இப்படி விற்கும் மருந்துகளையே ‘ஜெனரிக் மருந்துகள்’ என்று அழைக்கிறோம்.
ஒரு மருந்தை வேதியியல் பெயரில் இல்லாமல், தயாரித்து விற்பனை செய்யும் மருந்து நிறுவனங்கள் வைத்திருக்கும் பெயரால் அழைப்பது ‘பிராண்டட்.’ உதாரணத்துக்கு ஒன்று... நாம் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு மாத்திரை ‘பாரசிட்டமால்.’ இது ஜெனரிக் பெயர். தயாரிக்கும் நிறுவனங்கள் வைத்திருக்கும் பெயர்களால் `Calpal’, `Crocin’, `Dolo’, `Metacin’ என்று அழைக்கப்படுகிறது. ஒன்று, இரண்டல்ல, `பாரசிட்டமால்’ ஐந்நூறுக்கும் அதிகமான பிராண்டட் பெயர்களில் விற்கப்படுகிறது!
ஜெனரிக் மருந்துகளால் என்னென்ன நன்மைகள்?
ஒரு மருந்து நிறுவனம் புதிதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்தால், முதல் 20 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனம் மட்டுமே அதை விற்பனை செய்ய முடியும். இதைக் ‘காப்புரிமைக் காலம்’ என்று சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் வேறு எந்த நிறுவனமாவது அதைத் தயாரித்து, விற்பனை செய்ய விரும்பினால், கண்டுபிடித்த நிறுவனத்துக்கு ராயல்டி கொடுக்க வேண்டும். காப்புரிமைக் காலம் முடிந்த பின்னர், யாரும் மருந்தைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும்.
மருந்தைக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் நிறுவனம், மருந்தின் விலையை நிர்ணயம் செய்யும்போது அதில் உள்ள மூலப்பொருள்களின் விலையோடு, தாங்கள் கண்டுபிடித்ததற்கான சிறு தொகையையும் சேர்த்தே விலையாக வைப்பார்கள். இதனால் மருந்தின் விலை அதிகமாக இருக்கும். காப்புரிமைக் காலம் முடிந்த பின்னர், மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தைத் தயாரித்தால், மூலப்பொருள்களின் விலையோடு சிறு லாபத் தொகையை மட்டுமே சேர்த்து விற்பனை செய்வார்கள். எனவே, மருந்தின் விலை பல மடங்கு குறையும். மற்ற நிறுவனங்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால், மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனமும் குறைந்த விலைக்கே மருந்தை விற்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும். இந்த விலைகளில்கூட சின்னச்சின்ன வித்தியாசங்கள் இருக்கும்.
``2016 அக்டோபர் மாதம், `சிகிச்சைக்கு வருபவர்களுக்கு எந்த ஒரு கம்பெனி பெயரிலும் (Brand name) மருந்துகளை எழுதிக் கொடுக்கக் கூடாது. அதன் ஜெனரிக் பெயர்களைத்தான் (Generic) எழுதித் தர வேண்டும்’ என்று இந்திய மருத்துவக் கழகம் (Medical Council of India) விதியை நிர்ணயம் செய்திருக்கிறது. சட்டத்திலும் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இதைப் பின்பற்றுவதில்லை. மருத்துவர்கள் ஜெனரிக் மருந்துகளைத்தான் எழுதுகிறார்களா என்பதை இந்திய மருத்துவக் கழகமும் கண்காணிப்பதில்லை’’ என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
‘‘ஒரு மருந்து வேறொரு நிறுவனத்தால் குறைவான விலைக்கு விற்கப்பட்டாலும், அதை எழுதித் தருவதில்லை. நம் மக்களும், `மருத்துவர்கள் எழுதித் தரும் நிறுவன மருந்துகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். `இதே மருந்து... வேற கம்பெனி புராடெக்ட் இருக்கு, விலையும் குறைவு... தரட்டுமா?’ என்று மருந்துக்கடைக் காரர்களே கேட்டாலும்கூட `வேணாம், விலை அதிகமா இருந்தாலும் பரவாயில்லை... டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தையே குடுங்க’ என்று கேட்டு வாங்குகிறவர்கள்தான் இங்கே அதிகம்” என்கிறார் அவர். அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் உதவியோடு செயல்படும் `மக்கள் மருந்தக’த்தில் ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும், மக்கள் ஏன் தனியார் மருத்துவமனைகளையும் மெடிக்கல் ஷாப்களையும் தேடிச் செல்கிறார்கள் என்பது பற்றி விளக்குகிறார் மருத்துவர் புகழேந்தி.
‘‘அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் தரம் குறைந்த மருந்துகள்தான் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனால் நோய் குணமாகாமல், வெகு நாள்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. அதனால் சலிப்பு ஏற்பட்டு, பலரும் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். ஆனால், அரசு மருத்துவர்களோ, `யாரும் தொடர்ச்சியாக வருவதில்லை’ என்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மக்கள் மருந்தகங்களிலும் சில முக்கியமான மருந்துகள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. மருந்து நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்திலிருந்து ஏழை மக்களைக் காப்பாற்ற, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களுக்கு இலவசமாக மருந்துகளைக் கொடுக்க அரசு முன்வர வேண்டும். அதே நேரத்தில், `இலவசமாகக் கொடுக்கிறோம்’ என்பதற்காகத் தரக்குறைவாகவும் அவற்றைத் தயாரிக்கக் கூடாது. ‘ஜெனரிக் மருந்துகள் அனைத்துமே தரமற்றவை என்கிற மருத்துவர்களின் பொதுவான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அனைத்து ஜெனரிக் மருந்துகளையும் அப்படிச் சொல்ல முடியாது. தரமில்லாத மருந்துகள் தயாரிக்கப்பட்டால், அவற்றைக் கண்டுபிடித்து அந்த நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. அதை விட்டுவிட்டு மக்களை இன்னும் ஏழையாக்குவது, பலிகடா ஆக்குவது கூடாது” என்கிறார் புகழேந்தி.
இதுபற்றி கூட்டுறவு மருத்துவமனைகளின் முன்னோடியான மருத்துவர் ஜீவானந்தத்திடம் பேசினோம். ``ரஷ்யாவின் உதவியோடு, `ஹெச்.ஏ.எல்’ (Hindustan Antibiotics Limited) என்ற பெயரில் அரசாங்கமே மருந்துகளைத் தயாரித்தது. பெரும்பாலான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மலிவுவிலைக்கு விற்பனை செய்யப்பட்டன. ஆனால், முறையற்ற நிர்வாகத்தாலும், தொழிற்சங்கங்களின் தேவையற்ற போராட்டங்களாலும் அந்த நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களின் விற்பனை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக இங்கே உள்ள மருந்துகளைத் தடைசெய்வது போன்ற செயல்களில் அரசும் ஈடுபட்டுவருகிறது. உலக வர்த்தக அமைப்பில் இந்தியா கையெழுத்திட்டதே இதற்குக் காரணம்.
3,000 ரூபாய்க்கு வெளியில் விற்கப்படும் மருந்துகள் அரசு நடத்திவரும் `மக்கள் மருந்தக’த்தில் வெறும் 400 ரூபாய்க்குக் கிடைக்கின்றன. ஆனால், முக்கியமான சில மருந்துகள் ஜெனரிக் மருந்துகள் அட்டவணையில் இல்லை. அங்கே கிடைக்காத மருந்துகளை வாங்க தனியார் மருந்துக் கடைக்குச் சென்றால், `மற்ற மருந்துகளையும் அங்கேயே போய் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று துரத்தாத குறையாகச் சொல்வார்கள். இதனால் `அனைத்து மருந்துகளையுமே தனியார் மருந்துக் கடைகளிலேயே வாங்கிவிடலாம்’ என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிடுகிறார்கள். மிகவும் பின்தங்கிய நாடான வங்கதேசத்தில் கடந்த 20 வருடங்களாக அடிப்படை மருந்துகள் எல்லாம் ஜெனரிக் மருந்துகளாகக் கிடைக்கின்றன. நம் நாட்டிலும் அனைத்து அடிப்படை மருந்துகளும் (Basic) ஜெனரிக் மருந்துகளாகக் கிடைக்கும்படி செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் ஜீவானந்தம்.
`மருத்துவர்கள், ஜெனரிக் பெயர்களை மட்டும்தான் எழுதவேண்டும், பிராண்டட் பெயர்களை எழுதக் கூடாது’ என்ற அறிவிப்பு வந்தபோது தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அதனைக் கடுமையாக எதிர்த்தது. இந்த அறிவிப்பால் மருந்துக்கடைகள் தங்கள் இஷ்டத்துக்கு, தங்களுக்குச் சலுகை தரும் கம்பெனி மருந்துகளையே விற்பனை செய்வார்கள் என்று குற்றச்சாட்டும் வைத்தார்கள். இது தொடர்பாகத் தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேதுராமனிடம் பேசினோம். ``மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது, அது நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவத்தன்மைகள் சார்ந்த பரிந்துரையாக இருக்கும். ஆனால், மருந்துக்கடைகள் தங்களுக்கு லாபம் கிடைக்கும் நிறுவனங்களின் மருந்துகளையே விற்பனை செய்வார்கள். மருந்து உற்பத்தி செய்கிற நிறுவனத்துக்கும் மருந்துக்கடைக்காரருக்கும் ஏதாவது பிரச்னை இருந்தால், அந்த நிறுவனத்தின் மருந்துகளை மருத்துவர்களே பரிந்துரைத்தால்கூட விற்பனை செய்ய மாட்டார்கள். இதுபோன்ற பல சிக்கல்கள் உள்ளன” என்கிறார் சேதுராமன்.
தமிழ்நாடு வேதியியலாளர்கள் மற்றும் மருந்தகங்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன், ``சில மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பிராண்டட் பெயருடன், கீழே அதன் ஜெனரிக் பெயர்களையும் எழுதிக் கொடுப்பார்கள். ஆனால், `அப்படி வாங்கும் மருந்துகளால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், தாங்கள் பொறுப்பல்ல’ என்றும் மருந்துச்சீட்டில் எழுதியிருப்பார்கள். எனவே, நாங்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே விற்கிறோம்’’ என்கிறார்.
மத்திய அரசின் உதவியோடு ‘ஜன் அவுஷதி’ என்கிற பெயரில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 3,000 மருந்துக்கடைகளில் ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. கடை நடத்த விருப்பமுள்ளவர்களுக்கு அரசின் சார்பில் மானியமும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 227 ஜெனரிக் மருந்துக் கடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் முதன்முதலாக, சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் சிவகங்கை மாவட்டத்தில்தான் ஜெனரிக் மருந்துக்கடை ‘மக்கள் மருந்தகம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
சிவகங்கையில் உள்ள `மக்கள் மருந்தகம்’ கடையின் உரிமையாளர் கண்ணனிடம் பேசினோம். ``இந்தத் திட்டத்தின் கீழ் காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண பிரச்னைகளுக்கான மருந்துகள் முதல் அனைத்து வகையான வலி நிவாரணிகள், புற்றுநோய், ஹெச்.ஐ.வி போன்ற கொடிய நோய்களுக்கான மருந்துகள் வரை அனைத்துவிதமான மருந்துகளும் இங்கே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
வருகின்ற ஜனவரி மாதம் முதல் மேலும் பல மருந்துகள் இந்தத் திட்டத்தின் கீழ் வர இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த மருந்தகங்கள் பற்றிச் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். அதனால் `ஜெனரிக் மருந்துகள்’ என்றாலே `தரமற்ற மருந்துகள்’ என்கிற சிந்தனை பலருக்கும் வந்துவிட்டது. அதனாலேயே பலரும் ஜெனரிக் மருந்துகளைப் புறக்கணிக்கிறார்கள்.
பலர் வணிக நோக்கத்தோடு ஆரம்பித்து, கடைகளைச் சரியாக நடத்துவதில்லை. தேவையான மருந்துகளை வாங்கி ஸ்டாக் வைப்பதில்லை. இதனாலும், இந்த மருந்துக்கடைகளின் மீது மக்களுக்கு ஒருவித அதிருப்தி இருக்கிறது” என்கிறார் கண்ணன்.
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மருந்துகளின் விலையையும், கொடிய நோய்களுக்கான மருந்துகளின் விலையையும் மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம்தான் முடிவுசெய்ய வேண்டும். மக்களுக்குப் பயன்படும் 348 மருந்துகளை `அத்தியாவசிய மருந்துகள்’ என்று இந்தப் பட்டியலில் கொண்டு வந்தது அரசு. ஆனால், இவற்றில் சில முக்கியமான மருந்துகள் இல்லை. உதாரணமாகக் காய்ச்சலுக்குப் பயன்படும் ஒரு மாத்திரையின் 500 மி.கி. வீரியம் உள்ள மாத்திரை பட்டியலில் இருக்கிறது, ஆனால், 650 மி.கி வீரியம் உள்ள மாத்திரை பட்டியலில் இல்லை. மக்களுக்கு ஒரே வாய்ப்பாக இருப்பது, அவர்கள் தெய்வமாகக் கருதும் மருத்துவர்கள்தான்.
மக்கள் மருந்தகங்களில் மாத விற்பனை
* மாநகரங்களில்: ரூ.5,00,000 - 10,00,000 வரை
* நகரங்களில்: ரூ.1,00,000 - 1,50,000 வரை
* கிராமங்களை ஒட்டிய பகுதிகள்: ரூ.50,000 - 1,00,000 வரை
ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்யும் மக்கள் மருந்தகங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மண்டல அதிகாரிகளின் தொலைபேசி எண்கள்...
சென்னை: சக்கிஸ்வர்சிங் - 90953 06167
மதுரை: ராஜசேகர் - 94864 01773,
கோவை: அருண்குமார் - 94895 38779. விண்ணப்பங்கள் janaushadhi.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

Thursday, 28 June 2018

எலும்பு முறிவு


அறிமுகம் :

எலும்பின் தொடர்ச்சியில் முறிவு ஏற்படும் மருத்துவ நிலையே எலும்பு முறிவு எனப்படும். வலிமையான தாக்கம் அல்லது அழுத்தத்தால் எலும்பு முறிவு ஏற்படலாம். எலும்புப் புரை, எலும்புப் புற்று, எலும்புக் குறையுருவாக்கம் போன்ற நிலைகளினால் எலும்பு பலவீனமாகி சிறு காயத்தாலும் முறிவு ஏற்படலாம். இவ்வாறு முறிவு ஏற்பட்டால் அது நோயால் உண்டாகும் எலும்பு முறிவு எனப்படும்.
வகைப்பாடு:
காரணங்களால்:
  • காயத்தால் முறிவு – உ-ம்: விழுதல், சாலை விபத்து, சண்டை போன்ற பல காரணங்களால் ஏற்படும் எலும்பு முறிவு.
  • நோயியல் முறிவு – சில நோய்களால் எலும்பு பலவீனம் அடைவதால் ஏற்படும் முறிவு. உ-ம். நோயிடம் மாறலால் எலும்பு பலவீனம் அடைந்து எலும்பு முறிதல். நோயியல் முறிவுக்கு எலும்புப்புரை ஒரு பரவலான எடுத்துக்காட்டு.
அனைத்து முறிவுகளையும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
  • மூடிய (எளியமுறிவு: தோல் சிதையாமல் இருக்கும்.
  • திறந்த (கூட்டுமுறிவு: எலும்பு முறிவோடு தொடர்புடைய காயம். இதனால் எலும்பு அசுத்தமாகி தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.
பிற வகையான முறிவுகள்:  
  • முழு முறிவு: எலும்பு முழுமையாகத் துண்டாதல்.
  • பகுதி முறிவு: எலும்புகள் அரைகுறையாக இணைந்தே இருக்கும். எலும்புத் திசுவில் பிளவு இருக்கும். ஆனால் அது முழுமையாக எலும்பை ஊடுறுவிச் செல்லாது.
  • நீள்வெட்டு முறிவு: எலும்பின் நீள் அச்சுக்கு இணையான முறிவு.
  • குறுக்குவெட்டு முறிவு: எலும்பின் நீள் அச்சுக்கு செங்கோண முறிவு.
  • சாய்கோண முறிவு: எலும்பின் நீள் அச்சுக்குக் குறுக்கான முறிவு.
  • நெளி முறிவு: உடைந்த எலும்பின் ஒரு பகுதியாவது நெளிந்திருத்தல்.
  • நொறுங்கிய முறிவு: எலும்பு பல துண்டுகளாக நொறுங்குதல்.
  • தாக்கமுறு முறிவு: எலும்புத் துண்டுகள் ஒன்றுக்குள் ஒன்று புகுதல்.
  • பீறல் முறிவு: எலும்புத் துண்டு முதன்மைப் பகுதியில் இருந்து விலகல்.


அறிகுறிகள் :
முறிவால் ஏற்படுவன:
  • வலியும் இரத்தப்போக்கும்
  • வீக்கம்
  • பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றி சிராய்ப்பும் தோல் நிறமாற்றமும்.
  • காயப்பட்ட இடத்தில் நோயாளியால் உடலெடையை செலுத்த முடியாமை.
  • பாதிக்கப்பட்ட இடத்தை  நோயாளியால் அசைக்க முடியாமை.
திறந்த முறிவாக இருந்தால் இருக்கக்கூடியவை:
இரத்தக்கசிவு
நரம்புகள் அல்லது குழாய்கள், தண்டுவடம் மற்றும் நரம்பு வேர்கள் (தண்டுவட முறிவு) அல்லது மூளைப் பகுதிகள் (மண்டையோட்டு முறிவு) ஆகிய சார்ந்த பகுதிகளில் அதற்கேற்ற அறிகுறிகள் தோன்றும்.
காரணங்கள் :
வேகமாக மோதி விழுவதாலோ சாலை விபத்துகளாலோ பொதுவாக முறிவுகள் உண்டாகின்றன.
ஆரோக்கியமான எலும்புகள் மிகவும் வலிமையானவையும் நெகிழ்திறன் வாய்ந்தவையுமாகும். அவற்றால் சக்தி வாய்ந்த தாக்கத்தையும் எதிர்கொள்ள முடியும். மக்கள் வயதடையும் போது இரு காரணிகள் அவர்களின் எலும்பு முறிவு ஆபத்தைக் கூட்டுகிறது: பலவீனமான எலும்புகள் மற்றும் கீழே விழும் ஆபத்து. பெரியவர்களை விட குழந்தைகள் உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால் விபத்து அல்லது விழும் ஆபத்து அதிகம் உள்ளது. இதனால் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகம். பலவீனப்படுத்தும் நோய் உள்ளவர்களின் எலும்புகள் பலவீனப்பட்டு அதனால் எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உதாரணமாக எலும்புப்புரை, தொற்று அல்லது புற்று இதில் அடங்குவன.
நோய்கண்டறிதல் :

நோய் வரலாற்றையும் உடல் பரிசோதனையையும் கொண்டு மருத்துவ ரீதியாக எலும்பு முறிவு கண்டறியப்படுகிறது.
முறிந்ததாகச் சந்தேகப்படும் எலும்பின் எக்ஸ்-கதிர் பிம்பமும் எடுக்கப்படும்.
எக்ஸ்-கதிர் மட்டும் போதாத போது சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. எடுக்கப்படும்.
சிக்கல்கள் :

பிழை இணைவு: முறிவு தவறான நிலையில் குணமடைந்தாலோ அல்லது முறிவு இடம் மாறினாலோ பிழை இணைவு ஏற்படும்.
எலும்பு வளர்ச்சியில் இடையூறு - குழந்தைப் பருவ எலும்பு முறிவு எலும்பின் இரு முனையையும் பாதித்தால் எலும்பின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பின்னாளில் குறை ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகளும் அதிகரிக்கும்.
தொடர் எலும்பு அல்லது எலும்பு மச்சைத் தொற்று – தோலில் சிதைவு ஏற்பட்டால், நுண்கிருமிகள் உட்புகுந்து எலும்பிலும் மச்சையிலும் தொற்றை உண்டாக்கும். இதனால் தொடர் தொற்று உண்டாகும் (எலும்பழற்சி). நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிக்க வேண்டி இருக்கும். சில வேளைகளில் அறுவை அல்லது சுரண்டல் தேவைப்படும்.
எலும்புச் சாவு – எலும்பு தேவைப்படும் இரத்தத்தைப் பெறாவிட்டால் சாகும்.
நவீன சிகிச்சை முறை :

மூடிய முறிவை மயக்க மருந்து இல்லாமலும் கொடுத்தும் சீர்செய்யலாம். எலும்பு முறிவு மருத்துவத்தை அறுவை அல்லது மரபு ரீதியானது என இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்.
அறுவை சிகிச்சை அற்ற எந்த முறையும் மரபு ரீதியானது எனப்படும். வலியைக் கட்டுப்படுத்துதல், நகராமல் இருப்பது அல்லது அறுவையின்றி சீர்ப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
மரபு ரீதியான அணுகுமுறை: குணமான பின்னர் காயமடைந்த பகுதி முடிந்த அளவு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை உறுதிப் படுத்துவதே முறிவு மருத்துவத்தின் நோக்கமாகும். காயம் பட்ட எலும்பு முற்றிலும் குணமாக சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே மருத்துவத்தின் இலக்காகும்.
அசையாக் கட்டு: முறிந்த எலும்பு குணமடையும் போது பொருந்த வேண்டும். இவற்றில் அடங்குவன:
  • மாவுக்கட்டு அல்லது பிளாஸ்டிக் செயல் அணைச்சட்டம்: எலும்பு குணம் ஆகும் வரை அதை நிலையாக இவை வைத்திருக்கும். தற்காலத்தில் துளையுடை கட்டுக்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை எளிதல் இடக்கூடியவை. சிரமமாகவும் இருக்காது.
  • உலோகத் தகடுகளும் திருகாணிகளும்: தற்கால முறைகள் குறைந்த அளவுக்கே அறுவை தேவைப்படும் பொறிநுட்பங்கள் ஆகும்.
  • உள் மச்சை ஆணிகள் – நீண்ட எலும்புகளின் உள்ளே நடுவில் எஃகு கம்பிகள் பொருத்தப்படும். குழந்தைகளுக்கு நெகிழ் கம்பிகள் பயன்படுத்தப் படலாம்.
  • வெளிப்புற பிடிமானங்கள் – இவை உலோகம் அல்லது கார்பன் நாரால் செய்யப்பட்டவை. இவற்றில் இருக்கும் எஃகு பின்கள் தோலை ஊடுறுவி நேரடியாக எலும்புக்குள் செல்லும். இவை உடலுக்கு வெளியே ஒருவகை சாரம் போல் அமையும். பொதுவாக முறிந்த எலும்பு 2-8 வாரங்கள் அசைவற்று வைக்கப்படும். முறிந்த எலும்புவகை, இரத்த ஓட்டப் பிரச்சினை அல்லது தொற்று போன்றவற்றைப் பொருத்து கால எல்லை அமையும்.
வலி கட்டுப்படுத்தல்:  இபுபுரூபன், டைக்ளோஃபென் போன்ற வலி நிவாராணிகள் பயன்படுத்தப் படுகின்றன.
உடல்பயிற்சி சிகிச்சை: முறிவு குணமடைந்த உடன் தசை வலிமையையும் பாதிக்கப்பட்ட பகுதியில் அசைவையும் மீண்டும் பெறுதல் முக்கியமானதாகும். முறிவு மூட்டின் அருகிலோ அல்லது மூட்டிலோ ஏற்பட்டிருந்தால் நிரந்தர விறைப்பு உண்டாகும் அபாயம் உண்டு. முன்போல மூட்டை வளைக்க இயலாது.
அறுவை சிகிச்சை அணுகுமுறை:  பாதிக்கப்பட்ட எலும்பு அல்லது மூட்டின் அருகில் தோலுக்கோ அல்லது மென் திசுக்களுக்கோ சிதைவு ஏற்பட்டிருந்தால் பிளாஸ்டிக் அறுவை தேவைப்படும்.
·         எலும்பு ஒட்டு: மிகவும் சிக்கலான, நோயாளிக்கு பெரும் உடல்நல ஆபத்தை விளைவிக்கக் கூடிய அல்லது தகுந்தவாறு நலமடையாத எலும்பைச் சீர்செய்ய இழந்த எலும்புக்குப் பதில் எலும்பு பொருத்தும் எலும்பு ஒட்டு அறுவை மருத்துவம் செய்யப்படுகிறது.
தடுப்புமுறை :

ஊட்டச்சத்தும் சூரியஒளியும் – எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு மனித உடலுக்கு போதுமான சுண்ணாம்புச் சத்து தேவை. பால், பாலாடைக்கட்டி, தயிர், கீரை ஆகியவை சுண்ணாம்புச் சத்து நிறைந்தவை. சுண்ணாம்புச் சத்தை உறிஞ்ச நமது உடலுக்கு உயிர்ச்சத்து டி தேவை. சூரிய ஒளி உடல் மேல் படுதலும், முட்டை, எண்ணெய்ச் சத்து நிறைந்த மீன் வகைகளை உண்ணுதலும் உயிர்ச்சத்து டி-யைப் பெற சிறந்த வழிகள்.
உடல் செயல்பாடுகள் – எலும்புகளுக்குப் பாரந்தரும் உடல்பயிற்சிகளைச் செய்யும்போது எலும்புகள் அடர்வும் வலிமையும் பெறுகின்றன. எலும்புகளை உடல் இழுக்கும் உடல்பயிற்சிகளான கயிறுதுள்ளல், நடை, ஓட்டம், நடனம் ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம். வயதாகும் போது எலும்புகள் பலவீனம் அடைவதோடு, உடல் செயல்பாடுகளும் குறைகின்றன. இதனால் எலும்புகள் மேலும் பலவீனம் அடையும் ஆபத்து உண்டாகிறது. அனைத்து வயதினரும் உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம் ஆகும்.
பின் மாதவிடாய் -  பெண் இயக்கு நீர்மம் பெண்களின் உடலில் சுண்ணாம்புச் சத்தை பின் மாதவிடாய் காலம் வரை முறைப்படுத்துகிறது. இதற்குப் பின் சுண்ணாம்புச் சத்தை முறைப்படுத்துவது கடினமாகிறது. இதனால் பெண்கள் தங்கள் எலும்பு அடர்த்தி மற்றும் வலிமை குறித்து பின்மாதவிடாய்க் காலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

Public asked to cross check MRP on tablets with NPPA rates




Customers can download Pharma Sahi Daam app developed by NPPA to find out the actual price of the drug.
Download now - http://web.umang.gov.in/uaw/i/v/ref
Nellore: In the backdrop of some pharmaceutical companies charging higher prices for generic medicines, the drug control wing has been advising the public to check the maximum retail price written on most medicines by the National Pharmaceutical Pricing Authority (NPPA).
Customers can download an app known as- Pharma Sahi Daam developed by NPPA to cross-check the actual price of the drug. Drug control wing officials said they would book cases against those who ignored NPPA rates.
They said they have already filed criminal cases against five pharmaceutical companies based in North India for printing higher MRP on the strips contrary to the price determined by NPPA.
Deputy Director of Drug Control Department B. Suresh Babu said, “A generic medicine is a pharmaceutical drug that is equivalent to a brand-name product in dosage, strength, route of administration, quality, performance, and intended use, but does not carry the brand name. The generic drug has the same active pharmaceutical ingredient (API) as the original, but may differ in characteristics such as manufacturing process, formulation, excipients, colour, taste, and packaging.”
He said the inventor of any medicine has rights over the product for 20 years and it will become generic thereafter and anyone can produce the drug.
Since there are hardly any inventions in India, he said 99 per cent of the drugs in the country are generic. He invited the public to give written complaints if they come across any difference in the MRP printed on the strip compared to NPPA rates. Meanwhile, Red Cross India Nellore Unit chairman, Dr AV Subhramanyam, has suggested to the government to print GENERIC in bold red letters prominently on the strips of generic medicines to prevent manufacturing companies from cheating the public.
“The public can't tell whether the medicines are generic or not since all the generic medicines have trade names with five-fold increase in MRP rates. Medical shops have been selling generic trade name medicines as regular medicines with MRP and some of them offer 10 to 15 per cent discount to attract customers,” Dr Subhramanyam alleged.
Dr Subhramanyam, who is responsible for opening an exclusive generic medicines outlet near the district court in Nellore a few years back, says there is no need to start separate generic medical shops with the support of the government if GENERIC is printed in bold letters and authentic MRP on medicine boxes.
Meanwhile, Telangana state chemists association president Suman Gupta said, The registered retailers give medicines according to the prescription by doctors.” In cities no such incidents have been reported where people are forced to buy full strips.
Chemist’s licence seized for 5 days
It is a common practice for chemists to insist that customers buy the full strip of tablets even if the prescription is just for one or two tablets.
The drug control department, probably for the first time, closed a medical shop in Nellore and suspended its licence temporarily for five days from June 21 to 25, for the above practice.
This will send a clear message to all medical shops to supply whatever the quantity the customer needs, said Assistant Director of Drug Control, B Suresh Babu. He said drug shop licensees have been warned not to insist on customers buying more than they need.
He said the shop located near Nippo factory in Nellore was inspected after a customer complained that the staff had refused to give him four tablets of Hifenac-TH which cost `15 each. The customer was forced to buy a strip containing 10 tablets spending `150.
“Besides the customer's complaint we found some other shortcomings and suspended the licence for five days,” Mr Babu said.
He said the shop has taken back six tablets and returned the cash to the customer.
“There is no such rule that people should buy an entire strip in Andhra Pradesh state,” Mr Babu said making it clear that no medical shop can dictate terms to the customer if they come with a proper prescription and the drug is available in the outlet.
He advised the public to obtain bills for any transaction in medical shops as they are mandatory to lodge complaints in writing.
He said legal action is being taken against 17 medical shops of 31 they inspected during the last two days as part of a special drive on the orders of the Director General of Drug Control Administration. The chemist shops where functioning without a qualified pharmacist.

Wednesday, 27 June 2018

தீக்காயங்கள்


அறிமுகம் :
தீக்காயங்கள் ஒரு கடுமையான பொது சுகாதாரப் பிரச்சினையாகும். வெப்பம், கதிர்வீச்சு, கதிரியக்கம், மின்சாரம், உராய்வு அல்லது வேதிப்பொருட்கள் ஆகியவற்றால் தோல் அல்லது பிற அங்ககத் திசுக்களுக்கு ஏற்படும் காயமே தீக்காயம் என வரையறுக்கப்படுகிறது.
சூடான திரவம், திடப்பொருள் அல்லது தீயால் தோலின் பல்வேறு செல் அடுக்குகள் சிதைவடைகின்றன. புறவூதாக் கதிர், கதிர்வீச்சு, மின்சாரம் அல்லது வேதிப்பொருட்களால் ஏற்படும் தோல் காயங்களும், புகையை உள்ளிழுப்பதால் ஏற்படும் மூச்சுமண்டல சிதைவுகளும் தீக்காயங்கள் எனக் கருதப்படுகின்றன.
உலகச் சுகாதார நிறுவனப் புள்ளி விவரத்தின் படி உலகம் முழுவதும் தீக்காயத்தால் ஆண்டுதோறும் 265000 மரணங்கள் நிகழுகின்றன. கொதிநீர், மின்னதிர்ச்சி போன்றவற்றால் நிகழும் இறப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் இதில் அடங்கவில்லை. பெரும்பாலும் மரணங்கள் குறைந்த வருமான நாடுகளில் ஏற்படுகின்றன. குறிப்பாக உ.சு.நி. எல்லைக்குள் அடங்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பாதிப்புகள் அதிகம்.
இந்தியாவில் தீக்காயங்களால் 70 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 1.4 லட்சம் இறப்புகளும் 2.4 லட்சம் ஊனங்களும் இதில் அடங்கும். அதிக வருமான நாடுகளில் தீக்காய மரண விகிதம் குறைந்து வருகிறது.
பிற காயங்கள் போல் அல்லாமல் தீக்காய விகிதம் ஆண்-பெண் இரு பாலாருக்கும் ஒன்று போல் உள்ளது. பிற காயங்களில் ஆண்களின் விகிதம் அதிகம். திறந்தவெளி சமையல், பாதுகாப்பற்ற அடுப்புகள், தளர்வான ஆடைகள் ஆகியவையே பெண்களுக்கு ஆபத்து அளிப்பவை. சுய அல்லது நபர்களுக்கு இடையிலான வன்முறையும் தீக்காயங்களுக்குக் காரணமாக உள்ளது.
பெண்களோடு சிறு குழந்தைகளும் தீக்காயங்கள் ஏற்படும் ஆபத்தில் உள்ளவர்கள். தீக்காயம் அடையும் 5 பேரில் நால்வர் பெண்கள் மற்றும் சிறுவர்கள்.
குழந்தைகளுக்கு உண்டாகும் உயிருக்கு ஆபத்தான காயங்களில் தீப்புண் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. 1-9 வயதுக்குட்பட்ட குழந்தை மரணத்தில் தீப்புண் 11 வது முக்கியக் காரணம் ஆகும். உலக அளவில் தீக்காயங்களால் குழந்தைகளே அதிகமாக மரணம் அடைகின்றன.
நோய்க்குரிய காரணங்களில் தீப்புண் முக்கிய இடத்தை வகிக்கிறது. தப்பிப் பிழைப்பவர்களில் பலர் ஆயுட்கால ஊனங்களாலும், உடல் சிதைவுகளாலும், மன உளைச்சலாலும், அவமானங்களாலும் அல்லல் படுகின்றனர்.
தீக்காயங்கள் தவிர்க்கக் கூடியவையே. அதிக முயற்சியாலும் கவனிப்பாலும் தீக்காய நோய்கள், மரணம் மற்றும் ஊனங்களை வெகுவாகக் குறைக்கலாம்.
தேசிய தீக்காயத் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டம் (NPPMRBI)  என்பது தீக்காயங்களைத் தடுக்கவும்  பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் மறுவாழ்வு அளிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளை வலிமைப்படுத்த இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக சுகாதாரச் சேவைகள் பொது இயக்ககம் மேற்கொள்ளும் ஒரு முன்முயற்சியாகும்.

அறிகுறிகள் :

ஆழத்தைப் பொறுத்துத் தீக்காய அறிகுறிகள் காணப்படும். தீக்காயங்களை மூன்று வகையாகப் பகுக்கலாம்:
முதல்நிலை அல்லது மேலோட்டமான காயங்கள்:  தோலின் மேல் செல்லடுக்கு பாதிக்கப்படுதல். இதனால் சிவப்பும் வலியும் ஏற்படும். கொப்புளம் இருப்பதில்லை. சூரியக் கதிர்வீச்சு, சூடான பொருட்கள், திரவங்கள் அல்லது தீப்பொறி ஆகியவை மூடப்படாதத் தோலின் மேல் படுதலால் இவை ஏற்படுகின்றன. தோல் நிறம், தன்மை அல்லது தடிமனில் எந்தவித நிரந்தரப் பாதிப்பும் இன்றி முதல்நிலைப் புண்கள் ஒரு வாரத்தில் ஆறிவிடும்.
இரண்டாம் நிலை அல்லது பகுதித் தடிப்பு தீப்புண்கள்: ஆழமான தோல் அடுக்குக்குகளைப் பாதிக்கும். அறிகுறிகள் கடுமையாக இருக்கும். பொதுவாகக் கொப்புளங்களும் காணப்படும்.
  • மூன்று வாரங்களில் புண் ஆறும்
  • ஆழமான காயங்கள் ஆற மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும். மிகைத்தசைவளர்ச்சி வடுக்களும் உருவாகலாம்.
மூன்றாம் நிலை அல்லது முழுத் தடிப்புத் தீப்புண்: அனைத்துத் தோல் அடுக்குகளும் பாதிக்கப்படும். தோல் வெண்மையாகக் காணப்படும்.  ஆரம்பக் கட்டங்களில் வலி இருப்பதில்லை. தோல் அடுக்குகள் வெகுவாக சிதைவடைந்து இருப்பதால் தோல் ஒட்டு சிகிச்சை இன்றி இவை குணமாகா.
உள்ளிழுப்புத் தீப்புண்களின் அறிகுறிகள்-
  • மூடிய இடத்தில் ஏற்பட்டதாக இருக்கும்
  • முகம், கழுத்து, உடலில் ஆழமான தீப்புண்கள்
  • மூக்கு முடி கருகல்
  • கரிகலந்த சளி, வாய்ப்பகுதி மூச்சுக்குழலில் கரித் துகள்கள்
  • குரல் மாற்றம்: கரடுமுரடன ஒலி அல்லது கடுமையான இருமல்









காரணங்கள் :

தீப்புண்ணின் காரணங்களை வெப்பம் சார்ந்தது உள்ளிழுப்பு சார்ந்த்து என இரண்டாகப் பிரிக்கலாம்:
வெப்பத் தீப்புண் பின் வருபவற்றால் ஏற்படும்:
  • சூடான திரவம் –சுடு  நீர், எண்ணெய், கொதிக்கும் நீராவி, சூடான உணவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
  • சூடான திடப்பொருள்: குறிப்பாக குழந்தைகளுக்கு தீப்புண்களை உண்டாக்கும். சாம்பல், கரி, தேய்ப்புப்பெட்டி, பற்றவைக்கும் கருவி, சமையல் பாத்திரங்கள், கொள்கலன்கள், மின்குமிழ்கள், வெளியேற்றுக் குழாய்கள் ஆகியவை இவ்வகைத் தீப்புண்களை ஏற்படுத்துபவை.
  • தீப்பிழம்பு: கசியும் வாயுக் குழாய், சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு விபத்து, பட்டாசுகள், பந்தல்களில் நெருப்பு பிடித்தல் ஆகியவற்றால் இவ்வகைப் புண்கள் உண்டாகும்.
  • வேதியல் தீப்புண்கள்: இவை வீடுகளில் விபத்தாக நிகழும் (கழிவறை சுத்திகரிப்பான்), அல்லது அமில வீச்சு அல்லது பணியிட விபத்து.
  • மின்சார தீப்புண்:  உறையற்ற மின் கம்பிகளில் சுற்றுத்தடை ஏற்படுவதால் தீப்புண் உண்டாகலாம். வீடுகள், விளையாட்டு மைதானம் அல்லது சாலைகளின் அருகில் செல்லும்  அதி இழுப்புவிசை கொண்ட மின்கம்பிகளால் ஏற்படும்.
  • உள்ளிழுப்புத் தீப்புண்கள்:
  • மிக அதிகமாகச் சூடாக்கப்பட்ட வாயுக்கள். நீராவி, சுடு திரவங்கள் அல்லது முற்றிலும் எரியாத நச்சுப் பொருட்களை சுவாசிப்பதால் இவ்வகைத் தீப்புண்கள் ஏற்படுகின்றன.
  • இவை, மேல் காற்றுப் பாதையில் வெப்பக் காயம், புகைக்கரியினால் காற்றுப்பாதையில் அரிப்பு அல்லது வேதியல் காயங்கள், மூச்சுத்திணறல், மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் சையனைடு போன்ற பிற வாயுக்களால் நச்சேறல் மற்றும் ஏறத்தாழ 20-30% நேர்வுகளில்  தோல் தீய்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • நெருப்பு தொடர்பான புண்களால் ஏற்படும்  மரணத்துக்கு உள்ளிழுப்புத் தீப்புண்களே பொதுவான காரணமாக உள்ளது.
ஆபத்துக் காரணிகள்:
 குறைந்த வருமான நாடுகளில் கிராமப் புற ஏழைகள் மத்தியில் தீப்புண்கள் பரவலாக ஏற்படுகின்றன. கவலை அளிக்கும் சில முக்கியக் காரணிகள் வருமாறு:
  • தரை மட்டத்தில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தல்: குழந்தைகள் இவற்றில் இடறி கொதிநீர் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
  • திறந்த வெளி விறகு அடுப்பைப் பயன்படுத்தல்.
  • திறந்த வெளி சமையலின் போது தளர்வான பருத்தி ஆடை அணிதலாலும் பாத்திரங்களைக் கையாள துணிகளைப் பயன்படுத்தும் தவறான முறையாலும்.
பிற ஆபத்துக் காரணிகள்:
  • பணி இடத்தில் நெருப்பால் ஆபத்து
  • வறுமை: நெரிசல் (படுக்கை/சிறுவர் விளையாடும் பகுதி அருகில் கொண்ட சமையலறை உள்ள ஓர் அறை வீடு)
  • புகைத்தல், மதுப்பழக்கம்
  • பாதுகாப்பு அற்ற எரிவாயு/மின்சாரம்
  • வலிப்பு, ஊனம் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு போன்ற மருத்துவ நிலைகள்.
வீட்டிலும், பணியிடத்திலும் தீப்புண்கள் ஏற்படலாம். சமயலறையில் கொதிநீர், தீப்பிழம்பு அல்லது அடுப்பு வெடிப்பதால் குழந்தைகளும் பெண்களும் காயம் அடைகின்றனர். தீ, கொதிநீர், வேதிப்பொருள், மின்சாரம் ஆகியவற்றால் ஆண்கள் பணியிடங்களில் தீக்காயம் அடைகின்றனர்.

நோய்கண்டறிதல் :

முந்திய முழு விவரங்களும் உடல் பரிசோதனையுமே நோய்கண்டறிதலுக்கான முதற் படி.
அ. தீக்காயத்திற்கான காரணத்தையும் நோயாளியின் வயதையும் கேட்டறிய வேண்டும். இதன் மூலம் பின் வருவன போன்று காயத்தின் ஆழ அகலத்தை அறிய அது உதவும்:
  • தீப்பிழம்புக் காயங்கள் பொதுவாக முழு ஆழப்புண்களாக இருக்கும். கொதிநீர்ப் புண்கள் மேலோட்டமானதாக இருக்கலாம். ஆனால் நெய், எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் புண்கள் ஆழமாக இருக்கும். வேதியல் மற்றும் மின்சாரத்தால் உண்டாகும் காயங்கள் ஆழமானவை.
  • நோயாளியின் வயது – குழந்தைகளுக்கும் முதியோருக்கும் தோலின் மென்மை காரணமாகக் காயம் ஆழமாக இருக்கும்.
ஆ. பரிசோதனை:  எரிந்த பரப்பு, காயத்தின் ஆழம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்து தீப்புண்ணின் கடுமை காணப்படும். எரிந்த பரப்பைப் பொறுத்து நோயும் மரணமும் ஏற்படும். முதியவர்களுக்குச் சிறிய தீப்புண்ணும் மரண ஆபத்தை உருவாக்கக் கூடும்.
முழு உடல் பரப்பும் 100% எனக் கொள்ளப்படுகிறது. எரிந்த பரப்பு சதவிகிதத்தில் (%) கணக்கிடப் படுகிறது. எரிந்த உடல் பரப்பைக் கணக்கிட பல வழிகள் உள்ளன:
  • களின் விதி: பெரியவர்களின் மொத்த எரிந்த உடல்பரப்பைக் (TBSA)  கணக்கிட இது பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது.  உடல் 11 சமமான பகுதிகளாகப் பகுக்கப் படுகிறது. இது ஒட்டுமொத்தமாக 99 விழுக்காடாகும். மீதி 1% கரவிடத்துக்கு (மலவாய்க்கும் அடிவயிற்றிற்கும் இடைப்பட்டப் பகுதி) ஒதுக்கப்படுகிறது. தலைக்கும் ஒவ்வொரு மேல் அவயவங்களுக்கும் 9 %.  ஒவ்வொரு கீழ் அவயவங்கள், உடலின் முன்பகுதி மற்றும் உடலின் பின்பகுதிக்கு 18 %.*
  • பிறந்த குழந்தை மற்றும் சிறுவர்களில் (10 வயதுக்கும் கீழ்) தலை பெரிதாகவும் உடல் சிறியதாகவும் இருக்கும். எனவே 9 களின் விதி பொருந்தாது. இதனால் லண்ட் மற்றும் பிரவ்டர் அட்டவணையைப் பயன்படுத்தலாம்.
  • உள்ளங்கை விதி: மூடிய கை உடல் பரப்பின் 1% ஆகும்.
ஆரம்பத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் சிக்கல்கள் இன்றி சாதாரணக் காயம் அடைந்தவர்கள் போலவே காணப்படுவார்கள். ஆனால் 5% மேற்பட்ட எந்தக் காயத்தையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
கடுமையைப் பொறுத்து தீக்காயங்கள் சிறியவை, மிதமானவை மற்றும் ஆபத்தானவை என வகையறுக்கப்படுகின்றன.
சிறு தீப்புண்கள்:
  • பெரியவர்களில் 15% மற்றும் சிறுவர்களில் 10% -க்கும் குறைவான தீப்புண் (வேதியல், மின்சாரத் தீப்புண்களும் முகம், கை மற்றும் கரவிடப் புண்கள் அல்லாமல்)
  • இவற்றிற்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கலாம்
மிதமான தீப்புண்கள்:
  • பெரியவர்களில் 15-25% மற்றும் சிறுவர்களில் 10-15%-க்கும் குறைவான தீப்புண்கள்.
  • மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம்.
ஆபத்தான தீப்புண்கள்:
  • பெரியவர்களில் 25% மற்றும் சிறுவர்களில் 15% பிறந்த குழந்தைகளில் 5% தீப்புண்கள்.
  • மின்சாரத் தீப்புண்
  • வேதியல் தீப்புண்
  • சுவாசமண்டலப் புண்
  • பிற காயங்களோடு தொடர்புடைய தீப்புண்கள்:
o   எலும்புக் காயம்
o   நெஞ்சுக் காயம்
o   வயிற்றுக் காயம்
o   தலைக்காயம்


நவீன சிகிச்சை முறை :

தீ விபத்து எப்போதும் எங்கும் மருத்துவ நிபுணர்கள் இல்லாத இடத்திலும் நிகழக் கூடும். பார்த்துக் கொண்டு இருப்பவர்களே முதலுதவியைச் செய்தாக வேண்டும். விபத்து நடந்த இடத்தில் உடனடியாக அளிக்கப்படும் உதவியால் கடுமையான பாதிப்புகளைக் குறைக்கலாம்.
விபத்து நடக்கும் இடத்தில் (முதல் உதவிகுளிர்விமூடுஅழை):  அனைத்து வகையான தீக்காயங்களுக்கும் முதல் உதவி செய்வதன் அடிப்படைகள் ஒரே மாதிரியானதுதான். சில குறிப்பிட்ட வகைகளை குறிப்பிட்ட விதமாகக் கையாள வேண்டும்.
வெப்பத் தீப்புண்:
  • தீப்பிடித்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை அகற்ற வேண்டும்.
  • எரிந்த பகுதி மேல் இருக்குமாறு பாதிக்கப்பட்டவரைத் தரையில் படுக்க வைக்க வேண்டும் (பிற பகுதிகளும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்டவரை உருட்டக் கூடாது என வல்லுநர்கள் உரைக்கின்றனர்). கீழே தரையோடு தரையாகப் படுக்க வைப்பதால் முகம், தலை, முடி ஆகியவையில் பாதிப்பு  ஏற்படாது. மேலும் நெருப்பு உடலைச் சுற்றி பரவாது.
  • தீயை விசிறி விட வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்டவரை ஓட விடக் கூடாது.
  • பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால் அல்லது அவரால் நடக்கமுடியாவிட்டால் தீபற்றிய இடத்தில் இருந்து அவரை இழுத்து அகற்றவும்.
  • நெருப்பு பற்றிய இடத்தில் புகை அதிகமாக இருந்தால் காப்பாற்றுபவர் கீழே தவழ்ந்து செல்ல வேண்டும். இதன் மூலம் நச்சுப் புகை உள்ளிழுப்பைக் குறைக்கலாம் (புகை, வாயு, சூடான காற்று பொதுவாக மேல் எழும்). ஆவி, கரி மற்றும் பிற நச்சுப் பொருட்களை வடிகட்ட ஈரமான கைக்குட்டையின் வழியாக சுவாசிக்கவும்.
  • அதிக அளவில் தண்ணீரைப் பாதிக்கப்பட்டவரின் மேல் ஊற்றி தீயை அணைத்து வெப்பநிலையைக் குறைக்கவும்.
o   தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பால்,குளிர்பானம் போன்ற எரியாத வேறு திரவத்தைப் பயன்படுத்தலாம் அல்லது
எரிந்த பகுதி மேல் இருக்கும் படியாக பாதிக்கப்பட்டவரை தரையில் கிடத்தவும். கட்டியான பருத்தித் துணியால் (போர்வை/சாக்கு/டரி/கோட்டு அல்லது ஏதாவது கட்டித் துணி) போர்த்தவும் நெருப்பு அணைந்தவுடன் இதை அகற்ற வேண்டும். இல்லையெனில் வெப்பத்தைத் துணி தக்க வைக்கும் (நைலான் அல்லது வேறு எரியும் தன்மையுள்ள  பொருளைப் பயன்படுத்தக் கூடாது).
o   நெருப்பை அணைக்கத் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
o   நெருப்பை அணைக்க மண்/மணலை பாதிக்கப்பட்டவர் மீது பூசவோ எரியவோ கூடாது.
  • எரிந்த துணிகள் அனைத்தும் (பெல்ட்டு, சாக்ஸ், ஷூ உட்பட), நகைகளும் (நெக்லெஸ், கைகடிகாரம், வளையல், பிரேஸ்லெட், மூக்குத்தி, மோதிரம், கொலுசு போன்றவை) அகற்றப்பட வேண்டும்.
  • களிம்பு, கிரீம், லோஷன், பவுடர், கிரீஸ், நெய், ஜெண்டியன் வயலட், காலமைன் லோஷன், பற்பசை, வெண்ணெய், வண்ணமேற்றும் பொருட்கள் போன்ற எதையும் தீப்புண் மேல் இடக்கூடாது.
  • அசுத்தம் ஆகாதவாறு எரிந்த உடல் பகுதிகளை சுத்தமான, உலர்ந்த விரிப்பு/துணியால் பொதியவும். மேல் கீழ் அவயவக் காயத்தை தலையணை /நெகிழி உறையால் மூடவும். காயத்தை மூடுவதால் காற்றோட்டத்தல் ஏற்படும் வலி குறையும். மேலும், பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல முடியும்.
  • மூடப்பட்ட அறையில் தீக்காயம் ஏற்பட்டால் நோயாளிக்குக் கார்பன் மோனாக்சைடு நச்சு ஏற்படும். தொண்டையை சுத்தம் செய்து, கொண்டு செல்லும் போது உயிர்வளி முகமூடியைப் பயன்படுத்த வேண்டும்.
  • தொடர்பான பிற காயங்களையும் சோதித்தறிந்து (எலும்புமுறிவு அல்லது முதுகுத்தண்டுக் காயம்) அதற்கேற்பப் பராமரிப்பு அளிக்க வேண்டும்.
  • உண்ணவும் குடிக்கவும் எதையும் கொடுத்தால் வாந்தி உண்டாகலாம்.
  • முதல் உதவியின் போது வழக்கமான வலிநிவாரணிகள் எதுவும் கொடுப்பதில்லை. நோயாளியையும் குடும்பத்தினரையும் நல்வார்த்தைகள் கூறி தேற்றுவதே ஆரம்பப் பராமரிப்பின் முக்கிய அம்சம் ஆகும்.
  • பிற நோய் அல்லது அம்சங்களைக் (கர்ப்பம், மதுப்பழக்கம், போதைப்பழக்கம்) போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும்.
  • உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும். காயம்பட்டு முதல் 6 மணி நேரம் முக்கியமானது. கடுமையான தீக்காயம் பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்
வேதியல் தீப்புண்கள்:
  • அதிக அளவில் தண்ணீர் ஊற்றி வெதிப்பொருளின் அடர்த்தியைக் குறைக்கவும்.
  • S.A.F.E அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது: S – உதவியைக் கூவி அழைக்கவும் (Shout for help), A – நிலவரத்தை விரைவாக மதிப்பிடவும் (Assess the scene quickly), F –வன்நிகழ்வு ஆபத்தில் இருந்து விலகவும் (Free from danger of violence), E –விபத்திழப்பைக் கணிப்பீடு செய்யவும்( Evaluate the casualty).
  • பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
மின்தீப்புண்:
  • மின் இணைப்பைத் துண்டிக்கவும். உலர் மரக்குச்சி/தடி/மர நாற்காலி போன்ற அரிதிற்கடத்தியைக் கொண்டு பாதிப்படைந்தவரை அகற்றவும்.
  • அதி மின்னழுத்த ஆதாரத்தில் ஒருவர் விபத்துக்கு உட்பட்டிருந்தால், மின்சாரம் மீட்கச் செல்பவரை வளைந்து தாக்கக் கூடுமாதலால் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
  • காற்றுப்பாதை, சுவாசிக்க வழி மற்றும் காற்றோட்டம் உள்ளதா என கவனிக்கவும். எதிரசைவோ சுவாசமோ இல்லை என்றால் நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கவும்.
  • தொடர்புடைய காயம் உள்ளதா எனப் பார்க்கவும்.
  • உடனடியாக உதவியை அழைக்கவும்.
மின்னல் காயம்:
  • மின்னலால் காயம் அடைந்தவர்களுக்கும் மின் காயம் அடைந்தவர்களைப் போலவே சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோயாளிகளால் மூச்சு தடைபடுவதை நீண்ட நேரத்திற்குத் தாக்கு பிடிக்க இயலும். சில வேளைகளில் இதயப் பிசைவும் செயற்கை சுவாசமும் கொண்ட சிகிச்சைமுறை நீண்ட காலஅளவுக்குத் தேவைப்படும்.
மேலாண்மை
அ. ஆரம்பகட்ட மேலாண்மையில் மதிப்பிடுதலும்  ABCDE அணுகுமுறை கொண்ட கீழ்க்காணும் அளவுகோல்களைப் பராமரித்தலும் தேவைப்படும்.
  • காற்றுப்பாதை (Airway):  உள்ளிழுப்புத் தீப்புண்களுக்கு (மூடிய அறை விபத்து, முகம், கழுத்து அல்லது உடலில் ஆழமான தோல் தீக்காயம், மூக்கு முடி கருகல், வாய்தொண்டைப் பகுதியில் கரித்துகள்கள்) காற்றுப்பாதை மதிப்பீடும் மேலாண்மையும்.
  • சுவாசம் (Breathing): காற்று உள்ளிழுப்பு மற்றும் துரிதக் காற்றுப்பாதைப் பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கை.
  • சுற்றோட்டம்(Circulation): அகன்ற துளை நரம்புட்குழல் வழியாக ரிங்ஙர் லாக்டேட் கரைசலைத் துரிதமாகச் செலுத்தி திரவ மாற்றை உறுதிப்படுத்தவும். ஆரம்ப கட்ட செயற்கை சுவசம் அளித்து உயிர்ப்பித்தபின் வாய்வழி நீர்ச்சத்தேற்றும் கரைசலை அளிக்கலாம்.
  • ஊனம் (Disability): நரம்பியல் குறைபாடுகளோ வேறு ஏதாவது பெரிய ஊனங்களோ ஏற்பட்டுள்ளதா என்று நோக்க வேண்டும். உடலின் ஒரு மூடிய உள்வெளிக்குள் அதிக அழுத்தம் உருவாகும் போது உடற்கூற்றுப்பிரிவு நோய்த்தாக்கம் ஏற்படுகிறது. கால்கள், கைகள் மற்றும் வயிறு இந்நோய்த்தாக்கத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. உடற்கூற்றுப்பிரிவில் உருவாகும் அபாயகரமான அழுத்தத்தை குறைப்பதிலேயே இதன் சிகிச்சை அடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் இருக்கும் கட்டு, முட்டு போன்றவற்றை அகற்ற வேண்டும்.
  • பாதிக்கப்பட்டப் பரப்பு (Exposure):  தீய்ந்த பரப்பின் விழுக்காடு. நோயாளியின் உடல் (பின்பகுதி உட்பட) முழுவதும் சோதிக்கப்பட்டு தீய்ந்த பரப்பைத் துல்லியமாக்க் கணக்கிட்டு ஏதாவது தொடர்புடைய காயங்கள் உள்ளனவா என ஆராய வேண்டும்.
ஆ. அனைத்து நேர்வுகளிலும் வில்வாதசன்னி தடுப்பு மருந்து இட வேண்டும்.
இ. காயப் பராமரிப்பு:
  • ஒட்டிக் கொண்டு இருக்கும் செத்த திசுக்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
  • காயத்தில் இருந்து இறந்த திசுக்களை நீக்கிய பின், தீப்புண்ணை ஒன்றில் 0.25% (2.5 கி./லி) குளோர்ஹெக்சாடைன் கரைசல் அல்லது 0.1 % (1கி/லி) செட்ரிமைட் கரைசல் அல்லது மென்மையான நீர் அடிப்படை கிருமிநாசினியால் (எரிசாராய அடிப்படை கரைசலைப் பயன்படுத்தக் கூடாது) சுத்தப்படுத்த வேண்டும்.
  • ஒரு மெல்லிய அடுக்கு நுண்ணுயிர்க்கொல்லி களிம்பைப் (சில்வர் சல்பாடயசின்) பூசவேண்டும்.
  • எரிந்த பகுதியைப் பெட்ரோலியம் சல்லடைத்துணி மற்றும் உலர் சல்லடைத்துணியால் கட்ட வேண்டும். வெளிப்புறத்துக்குக் கசிவுகள் எட்டா வண்ணம் இதன் தடிமன் இருக்க வேண்டும்.
ஈ. காயத்தில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முழுவுடல் நுண்ணுயிர்க்கொல்லிகள் (Systemic antibiotics) கொடுக்கப்படும்.
உ. போதுமான அளவுக்கு சக்தியையும் புரதங்களையும் அளிக்கும் தகுந்த சத்துணவை நோயாளிக்கு அளிக்க வேண்டும்.
ஊ. தோல் ஓட்டு அல்லது வடுக்கங்களால் உண்டாகும் சுருக்கங்களை அகற்ற அறுவை போன்ற சிறப்புப் பராமரிப்பைப் புண் ஆறிவரும் காலகட்டத்தில் வழங்க வேண்டும்.
முதல் உதவி:
செய்க:
  • ஆடை, நகைகளை அகற்றித் தீபுண்ணில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் எரிச்சலை நிறுத்தவும்.
  • மின்சாரத்தால் தீப்புண் ஏற்பட்டால்  விரைவாக  முக்கிய மின் இணைப்பைத் துண்டிக்கவும். உலர் மரக்குச்சி/தடி/மர நாற்காலி போன்ற அரிதிற்கடத்தியைக் கொண்டு பாதிப்படைந்தவரை அகற்றவும்(அதி மின்னழுத்த ஆதாரத்தில் ஒருவர் விபத்துக்கு உட்பட்டிருந்தால், மின்சாரம் மீட்கச் செல்பவரை வளைந்து தாக்கக் கூடுமாதலால் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது).
  • வெறும் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காவிட்டால் போர்வையைத் தீயின் மேல் இட்டு அணைத்து விட்டு உடனடியாகப் போர்வையை எடுத்துவிட வேண்டும்.
  • வேதியல் தீப்புண் ஏற்பட்டால் வேதிப்பொருளின் அடர்த்தியைக் குறைக்க அதிக அளவில் நீரைக் காயத்தின் மேல் ஊற்ற வேண்டும்.
  • குளிர்ந்த நீரை ஊற்றி காயத்தின் வெப்பத்தைக் குறைக்கவும்.
  • நோயாளியை சுத்தமான துணி அல்லது போர்வையால் சுற்றி உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
  • கொண்டு செல்லும் போது முறிவோ பிற காயங்களோ ஏற்பட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • காற்றுப் பாதை, சுவாசம், காற்றோட்டம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
செய்ய வேண்டாம்:
  • உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் முதலுதவியில் ஈடுபட வேண்டாம் (மின் இணைப்பைத் துண்டிக்கவும், வேதியல் பொருட்களைக் கையாளக் கையுறை பயன்படுத்தவும்).
  • பாதிக்கப்பட்ட திசுக்களை மேலும் பாதிக்குமாதலால் பனிக்கட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • தொடர்ந்து குளிர்நீரை பயன்படுத்தினால் வெப்பநிலை இறங்கக்கூடும்.
  • புண்ணின் மேல் பசை, எண்ணெய், மஞ்சள் அல்லது கரடுமுரடான பருத்தித் துணி அல்லது பிற பொருட்களைப் போடக் கூடாது.
  • மருத்துவப் பணியாளர்களால் நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப் படுவதற்கு முன் கொப்புளங்களை உடைக்கக் கூடாது.
















தடுப்புமுறை :

தனிநபர்களும்சமுதாயங்களும் தீக்காயங்களைத் தடுக்கக் குறிப்பானபரிந்துரைகள்/முன்னெச்சரிக்கைகள்முதன்மைத் தடுப்பு:
  • வீட்டுச் சூழலில் நெருப்பைச் சுற்றி தடுப்பு அமைத்து உயரத்தை மட்டுப்படுத்த வேண்டும். தரையில் வைத்துச் சமைக்கக் கூடாது.
  • சமையல் பகுதியில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
  • எரிவாயு அடுப்பு, பிற அடுப்புகள், நுண்ணலை, வெப்பமூட்டிகள் மற்றும் மின் சாதனங்கள் அருகில் குழந்தைகள் நெருங்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • கவிழாமல் இருக்கப் பாத்திரப் பிடிகள் அடுப்பின் பின் அல்லது பக்கத்தில் வருமாறு வைக்க வேண்டும்.
  • குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு சமைக்கக் கூடாது.
  • மின் சாதனங்களை கவனமாகப் பயன் படுத்த வேண்டும். மேலும் பயனில் இல்லாத போது மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
  • அங்கீகாரமற்ற எரிவாயு உருளை மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பான அடுப்பையும் விளக்குகளையும் பயன்படுத்துக.
  • தளர்வான ஆடைகளை அணிந்துகொண்டு சமைக்க வேண்டாம். சேலை மற்றும் பிற ஆடைகளை இறுக்கிக் கட்டவும்.
  • குழந்தைகள் அருகில் இருக்கும்போது சூடான திரவம் கொண்ட பாத்திரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டாம்.
  • குளிக்கும் முன் நீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும்.
  • வீட்டின் மாடியின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் சென்றால் எச்சரிக்கையாக இருக்கவும். வீட்டில் திறந்த மின் கம்பிகள் இருக்கக் கூடாது.
  • விழாக் காலங்களில் பட்டாசுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும்.
விழாக்கால (தீபாவளிபாதுகாப்பு:
§  குழந்தைகள் உங்கள் மேல்பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
§  வெடிக்கும் பட்டாசுகளைக் கையில் பிடிக்கக் கூடாது.
§  எரியும் மத்தாப்புகளைப் பிறர்/தன்னை நோக்கிப் பிடிக்கக் கூடாது.
§  வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.
§  திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • அமில வீச்சு: சட்ட சீரமைப்பு, அமில/வேதிப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தல், சமுதாய மனமாற்றம் ஆகியவையே இதனைத் தடுக்கும் வழிகள். அமிலங்களைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
  • தீ பாதுகப்புக் கல்வியை ஊக்கப்படுத்தவும். புகை உணரி/புகை எச்சரிக்கை, தீயணைப்புக் கருவி, நெருப்பில் இருந்து தப்பும் அமைப்பு ஆகியவற்றை வீடுகளில் பயன்படுத்த வேண்டும். புகை எச்சரிக்கை தொடக்கக் கட்டத்திலேயே எச்சரிக்கை தருகிறது. எனவே மக்கள் தீ பரவுவதற்குள் தப்பலாம்.
  • வலிப்பு போன்ற நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • புயலின்போது:
§  கட்டிடத்திற்குள் செல்லவும் (கதவு, சன்னல், உலோகப் பொருள் (குழாய், சிங்க், ரேடியேட்டர்) மற்றும் இணைப்பில் இருக்கும் மின் சாதனங்களில் இருந்து விலகி இருக்கவும்).
§  வெளியில் மறைவிடம் கிடைக்காவிடால் மரங்களில் இருந்து விலகி நிற்கவும்.
§  மின்னல் நீர்வழிப் பாயும். எனவே புயல் நேரத்தில் நீச்சல், படகில் செல்லுதல், குளித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
இரண்டாம்நிலை தடுப்புமுறை: தீப்புண் நோயாளிகளை இறப்பில் இருந்தும் ஊனத்தில் இருந்தும் காப்பாற்ற முன் பின் மருத்துவமனை மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கின்றன.
§  முதல் உதவி: தீக்காய நோயாளிகள் விரைவில் குணமடைய முதல் உதவியின் பங்கு குறித்து தனிநபர் மற்றும் மக்கள் சமுதாயத்தை உணர்வூட்டி அறிவுபுகட்டுதல்.
§  சிறந்த மருத்துவமனை பராமரிப்பு: அதிர்ச்சியையும் சுவாசப் பிரச்சினைகளையும்  தடுக்க சிறந்த ஆரம்பக் கட்ட சிகிச்சை, சிறந்த தொற்றுத் தடுப்பு, அதிக அளவில் தோல் ஒட்டு, மற்றும் போதுமான சத்துணவு ஆகியவை இதில் அடங்கும். இறப்பு, ஊனம் மற்றும் தீப்புண் வலி ஆகியவற்றை இது குறைக்கும்.
மூன்றாம் நிலை தடுப்பு:
§  மறுவாழ்வு: தீக்காயம் அடைந்தவர்கள் ஊனம் மற்றும் உடல் சிதைவு அடைவதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும். உடல்பயிற்சி மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகிய நடவடிக்கைகள் மூலம் தீக்காயம் அடைந்து பிழைத்தவர்களுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்.
தேசிய தீக்காயங்கள் தடுப்புமேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டம்(NPPMRBI):
பயிற்சி பெற்ற நிபுணர்களால் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தீக்காயத்தால் ஏற்படும் மரணத்தையும் ஊனத்தையும் பெரிய அளவில் தடுக்க முடியும். தீக்காயப் பாதிப்பைத்  தடுத்தல் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகிய சேவைகளுக்காக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்ககம் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் தேசிய தீக்காயங்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
§  தீக்காய நிகழ்வுகள், நோய், மரணம் மற்றும் ஊனத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு இத் திட்டம் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவ மனைகள் வழியாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.
§  விழிப்புணர்வு உருவாக்கல், தீக்காய நோயாளிகளைக் கையாளவும் மறுவாழ்வு அளிக்கவும் தகுந்த கட்டமைப்புகளும் பயிற்சிபெற்ற வல்லுநர்களும் கொண்டு போதுமான சுகாதார வசதிகள் வழங்கல், மற்றும் ஆய்வுப்பின்புலத்தை உருவாக்குதலுமே இத்திட்டத்தின் முன்னுரிமைகள் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு-
குறிப்புகள்: