Welcome

Tuesday, 9 August 2016

Demand filling up of 1100 Pharmacists vacancies in TN Govt hospitals


தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1,100 பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மருந்து வாங்குவதற்காக மக்கள் கால்கடுக்க நிற்கின்றனர். தமிழகத்தில் 14 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டது. இதற்காக டாக்டர்கள், பார்மசிஸ்ட் ஆகியோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதன்படி, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் விவரம் ஆன்லைனில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் நோயாளிகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டாலும் தேவையான கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவில்லை என்பதோடு, பார்மசிஸ்ட்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

இதேபோல், வேலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வழங்கும் சீட்டுகள் அடிப்படையில் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீரிழிவு நோய், கார்டியாலஜி ஆகிய பிரிவுகளை தவிர அனைத்து மருத்துவ பிரிவுகளும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மயமாக்கப்பட்டது. இதனால், மருந்துகள் வழங்குவது எளிதாகும் விரைவாக மருந்துகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், ஆன்லைன் மயமாக்கப்பட்ட பிரிவுகளுக்கு தேவையான கம்ப்யூட்டர்கள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், 25 மருத்துவ பிரிவுகளுக்கு ஒரே ஒரு கணினி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 25 பார்மசிஸ்ட்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் பல ஆண்டுகளாக 5க்கும் மேற்பட்ட பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 1,100 பார்மசிஸ்ட் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆன்லைன் வசதிக்கேற்ப ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி வரிசைகளில் மருந்து வழங்கும் வகையில் கணினிகள் பொருத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment